NERVIZHI NEWS - DO NOT COPY
Nervizhi News Network
காத்திருக்கவும்...
நேரலை (LIVE)
Translate / மொழிமாற்றம் / පරිවර්තනය
முக்கிய செய்திகள்
+++ இலங்கை மற்றும் சர்வதேச முக்கிய நேரடித் தொகுப்புச் செய்திகள் உடனுக்குடன்.. +++
நெர்விழி நியூஸ் - எங்களின் சமூக ஊடகப் பக்கங்கள்

🔴 இன்றைய மாலை நேர முக்கிய செய்திகள் | 13.06.2026

🚔 சட்டவிரோத மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளை வைத்திருந்த 48 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொத்தஹேன பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்போ ரெசிடென்ட் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 340 புட்டிகள் வெளிநாட்டு மதுபானங்கள், 20,300 மான்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் ரூ. 53 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🏥 கந்தளாய் பாடசாலையில் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

கந்தளாய் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வழங்கப்பட்ட காலை உணவிற்குப் பின்னர் அன்னாசிப்பழம் உட்கொண்ட 16 மாணவிகள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிய முயன்ற ஊடகவியலாளர்களுக்கு பாடசாலை நிர்வாகம் உரிய பதில் வழங்க மறுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின் நலன் தொடர்பான விடயங்களில் வெளிப்படைத்தன்மை அவசியம் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

🎓 உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட திகதியிலேயே

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை ஒத்திவைக்கும் எந்தத் திட்டமும் இல்லை என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

🧳 வவுனியாவில் பரபரப்பு ஏற்படுத்திய மர்ம சூட்கேஸ்

வவுனியா பசார் வீதியில் உரிமைகோரப்படாத நிலையில் காணப்பட்ட சூட்கேஸ் ஒன்று பொலிஸாரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், அதற்குள் ஆடைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

💰 உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ ஆனார் எலன் மஸ்க்!

உலகின் முன்னணி தொழிலதிபரான எலன் மஸ்க், 1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சொத்து மதிப்பை எட்டிய முதல் நபராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை வெற்றியைத் தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு 1.14 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக சர்வதேச பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் தனது நீண்டகால இலக்கை அடைவதற்கான நிதி வலிமையை இந்த வளர்ச்சி மேலும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

🌐 மேலும் பல உடனடி, நம்பகமான மற்றும் துல்லியமான செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

பார்வையாளர்கள்: ...
PK.JUTHAN
News 🗞️ reporter PK .JUTHAN
Sri Lanka, Batticaloa, Kokkadichcholai